உணவும் ஆபத்தும்

எங்க ணே அப்போலாம் கூழு, பழைய சாதம், சின்னவெங்காயம்னு சாப்ட்டாய்ங்க தொண்ணூறு, நூறுனு வாழ்ந்தாய்ங்க ஆன இப்போ பீட்சா, பர்கர்,சவர்மானு திங்குறானுங்க நாற்பது, ஐம்பதுலயே போய் சேர்ந்திடுறாங்க.. என்று இன்றைய தினந்தோறும் நாட்களில் எங்கோ ஒரு மூலையில் இப்படியான உரையாடலை நாம் கெட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். 

அப்படி என்னதான் இருக்கு இந்த அதிநவீன உணவுகளில், இதை சாப்பிட்டா ஆயுள் குறையுதா? என்று சிந்தித்தால் பெரும்பான்மையாக அது உண்மையாகவே இருக்கிறது. பீட்சா சாப்பிடாலே மரணம் தானா என்றால் அப்படி அல்ல அதனை எப்படியாக எப்போது எல்லாம் நாம் உண்கிறோம் என்பதிலே அந்த அபாயம் உள்ளது. அப்படி என்னதான் இருக்கு அந்த பீட்சாவில். பீட்சா பொதுவாக மாவு அடிப்படை, சீஸ், சாஸ் மற்றும் பல்வேறு மேல்புறங்களைக் கொண்டிருக்கும். இது ஒரு சுவையான விருந்தாக இருந்தாலும், அதன் ஊட்டச்சத்து கலவையைப் புரிந்துகொள்வது முக்கியம் பீட்சாவில் பெரும்பாலும் கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த காரணிகள் எடை அதிகரிப்பு, அதிகரித்த கொழுப்பு அளவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவுகளுக்கு பங்களிக்கக்கூடும். இப்படி பட்ட அபாயம் நிறைந்த உணவுக்கு அடிமையாவது இன்றை வாழ்க்கை முறைக்கு பேர் ஆபத்து தான்.

 ஒரு பக்கம் இத்தகைய அதிநவீன உணவுகள் என்றால் மற்றொரு பக்கம் அசைவ உணவுகள் மேல் ஏற்படும் பைத்தியம். அதனால் ஏற்படும் ஆபத்துகள். இந்த அசைவ உணவுகளால் பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் அவர்களின் சிறுவயதில் இருந்தே துவங்கிவிடுகிறது. ஒரு பெண் குழந்தை பருவம்(வயதுக்கு வரும்) அடையும் வயது அக்காலத்தில் 18க்கு மேலாக இருந்தது ஆனால் இன்றைய காலத்தில் 12வயது குழந்தை பருவம் அடைந்து விடுகிறாள். இதற்கு பெரும் பாதிப்பாக இருப்பது இந்த அசைவ உணவும் பழக்கமும். இது மட்டுமல்லாது திருமணமான பெண்களுக்கு குழந்தை பிறப்பில் சிக்கல், நாற்பது வயதை அடைந்தவுடன் கருப்பை சிக்கல், மார்பக புற்று நோய் என வரிசையாக பட்டியல்கள் கிடக்கின்றன. அசைவ உணவு என்று பொதுவாக சொல்லிவிடவும் முடியாது அதிலும் முக்கியமாக கோழி இறைச்சி ஒரு கோழி உணவுக்கு இறைச்சியாகும் காலம் 45 நாட்கள் ஆனால் வியாபார நோகத்திற்க்காக ஒரு கோழி 15நாட்களிலே ஊசி போடபட்டு விற்பனைக்கு வந்து விடுகிறது. பெரும் பாலும் நகர்புற வாழ்வில் அசைவ உணவு தவிர்க்க முடியாத இடத்தைப்பிடித்துள்ளது. 

பெரு நகரங்களில் பணிக்கு செல்லும் நபர்களின் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வேளை அசைவ உணவு ஏதோ ஒரு ரூபத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் இரவு நேரம் பணியைப் பார்பவர்கள் இரவு உணவில் தந்தூரி,கிரில்,கபாப் என்று பல தரப்பட்ட வடிவில் சரியாக வெந்தும் வெகாமலும் இருக்கும் அசைவ உணவுகளை உண்கிறார்கள். இதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவாகள் சரியாக முறையில் செரிமானமாகாமல் அஜிரனக்கோலாறு, வயிற்று உபாதை என சிக்கலான விஷயங்களுக்கு ஆளாகிறார்கள்.

 இரவு நேரங்களில் அசைவ உணவை உண்டு அதற்கு ஏற்ப உடல், வேலைகளில் இன்றி அமர்தே வேலை செய்வதினால் அந்த உணவு அதிகப்படியான கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், உடல் பருமன் மாற்றம் என்று ஆரம்பித்து மாரடைப்பு என சென்றுவிடுகிறது. என்னடா இது அசைவ உணவுகளிலும் , அதிநவீன உணவுகளிலும் இவ்வளவு கேடா இதுக்கு அப்புறம் சைவத்தை சாப்பிடுறோம் ஸ்டாங்கா வாழ்றோமுனு உறுதிமொழிலாம் எடுத்துடாதீங்க. உங்களை அசைவ உணவோ, அதிநவீன உணவோ சாப்பிட வேணாமுனு சொல்லவரல. எதை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்ற புரிதலோடு சாப்பிட வேண்டும். சமீபத்தில் இணையத்தில் ஒரு படித்த செய்தியே இங்கு பகிர்கிறேன். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வகம் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”ஆய்வுக்காக சிப்ஸ், உடனடி நூடுல்ஸ், உடனடி சூப் உள்ளிட்ட 33 துரித உணவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதேபோல பீட்ஸா, பர்கர், பொரித்த சிக்கன், சாண்ட்விச் உள்ளிட்ட 19 பொருட்களின் மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் உள்ள உப்பு, கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.

இது அனைத்தும் நம் கண்ணுக்கு தெரியும் மலைபாம்புகள் ஆனால் நம் அன்றாட வாழ்வில் நமக்கு தெரியாமல் பூ நாகம் போன்று சிறிய விஷயங்களை உணவுகளாக எடுத்துக்கொள்கிறோம். ஆம் நாம் உட்கொள்ளும் நொறுக்கு தீனிகளே அவை. 

ஆமாங்க இன்றைய அவசர கால வாழ்க்கை ஓட்டத்தில் அடைக்கப்பட அரவேக்காடு உணவுகள் என்னும் விஷங்கள். பொதுவாக இந்தகைய உணவுகள் குழந்தைகளிடமே பெரும் பாதிப்புகளை ஏற்படுகின்றன. தொண்ணுருகளில்  நொறுக்கு தீனிகள் என்றால் அது முறுக்கு, அடை, இலந்தை பொடி, போட்டி என்று தான் சாப்பிட்டோம் ஆனால் இன்றோ பல இரசாயனங்களும், எளிதில் அழியக்க முடியாத படியான அமிலங்களை பயன்படுத்தியும் பதம்படுத்தியும் கவர்ச்சிகரமான பொட்டலங்களாக   அடைக்கபட்டு விற்பனைக்கு வருகின்ற. அத்தகைய கவர்ச்சிகரமான பொட்டலங்களை பார்த்தவுடனையே நம்முடன் கடை வீதிகளுக்கு வரும் குழந்தைகள் அடம்பிடித்து வாங்கி தந்த பிறகுதான் அந்த இடத்தைவிட்டே நகரும். இதவிட ஒரு படி மேலே போய் இப்போதுலாம் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே இது தான் வேண்டும், இது மட்டுமில்லாமல்  வீட்டீற்கே வரவேண்டும் என்று கட்டளைகளே இடுகின்றனர். அப்படி என்னதான் ஆபத்து வந்து விடுகின்றது என்ற கேள்வி எழும். ஆம் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளை வாங்கி தீ இட்டுப் பார்த்தால் அவை எரிகின்றது. இத்தகைய உணவுகள் உட்கொள்ளும் நம் பிள்ளைகளின் நிலைமை பெரும் கேள்வி குறியே….. 

இத்தகைய உணவுகளை உட்கொள்வதால் சிறுவயதிலே நீர்ழிவு நோய், உடல் பருமன், புற்று நோய் என்னும் பேராபத்தில் முடிகின்றது. 

நாம் உண்பதெல்லாம் விஷம் இல்லை. நாம் என்ன உண்கிறோம் எப்படியாக உட்கொள்கிறோம் என்பதே நம் வாழ்வின் நாட்களை நகர்துகிறது. ஆகையால் மருத்தை உணவாக உட்கொள்வதை தவிர்த்து,  உணவே மருந்து என்னும்  முறையை முடிந்தவரையில் வாழ்வில் நடைமுறைப்படுத்துவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version