புழுதி வாசகர்கள் அனைவருக்கும் அன்புநிறைந்த வணக்கம்.

தொடர்ந்து சிறப்பிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் புழுதி இணைய இதழில் காலநிலை மாற்றம் குறித்த ஒரு சிறப்பிதழ் கொண்டுவர முயன்று பலரை அணுகினோம்.
சிறிய இதழ் /பெரிய இதழ் என்று எந்த வேற்றுமையும் பார்க்காமல் சூழலியல் குறித்து கட்டாயம் பேசவும் எழுதவும் வேண்டும் என்று பங்களித்த ஆளுமைகளுக்கு நன்றியும் அன்பும்.

பல மணிநேரங்களாக இதழ்குறித்து விவாதிக்க காதுகொடுத்த அண்ணன் பாஸ்கர் மணிமேகலை, கவிஞர்.வேல்கண்ணன், கவிஞர்.நான் ராம், ராஜை செல்வகுமார், விஜயராணி மீனாட்சி, லிங்கா சதீஷ், வி.பி.ராஜ் , சுஜாதா அம்மா என வெளியே தெரியாமல் உழைத்த அனைவருக்கும் எங்களின் அன்பு.

எங்களின் இந்த இதழ்
ஒரு மண்புழுவின் அசைவைப்போல எங்களின் கருத்தை வெளிப்படுத்துகிறோம். இந்த சிறப்பிதழில் பல்வேறான தலைப்புகளில் பல்வேறான விசயங்களை உரையாடியிருக்கிறோம். எப்போதும் போல சோதனை ஓட்டத்தை நிகழ்த்தியிருக்கிறோம். அதனை வெற்றி ஓட்டமாக மாற்றுவதற்கு கட்டுரைகள் கொடுத்த , எப்போதும் இதழை வாசித்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைவரின் கைப்பிடித்து இதழை வெளியிடுகிறோம்.

அனைவருக்கும் நன்றியும் அன்பும்

கு.ஜெயபிரகாஷ் / சிறகன்/ தளபதி சல்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version