நேற்காணல்
கேள்: உங்களை பற்றிய அறிமுகம்?
திருநெல்வெலி மாவட்டத்தில் வெங்கட்ராயபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், எங்க ஊரிலே நான்தான் முதல் பட்டதாரின்னு சொல்லலாம். அதன்பிறகு என்னுடைய கல்லூரி படிப்பையும் என்னுடைய சட்டப்படிப்பை மதுரை சட்டக் கல்லூரியிலும் முடித்துவிட்டு practice பன்றதா? business பன்றதா? என்று ஒரு யோசனையில் இருக்கும்போது, இரண்டுக்கும் வாய்ப்பு வேலூரில் இருந்தது, என்னுடைய சொந்தக்காரங்கல்லாம் Hotel நடத்தி முடியாம அத close பண்ணிவச்சிருந்தாங்க, தெரிஞ்ச நண்பர் ஒருவரும் வழக்கறிஞர் துறையில இருந்தாரு, இரண்டையும் செய்வது என்பதானால் வேலூருக்கு குடிபெயர்ந்தேன். வேலூர் வரும்போது இரண்டுமே துவங்கினேன் வழக்கறிஞர் துறையும் Hotel-யும் எடுத்து நடத்த ஆரம்பிக்கும்போது உணவுத்துறை வந்து வேகமாக develop-ஆக ஆரம்பிச்சது வழக்கறிஞர் துறையை விட துல்லியமாக முன்னேரும் வாய்ப்பு கிடைச்சதனால நான் complete-ஆ வழக்கறிஞர் துறையை கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டு full-ஆ hotel துறைக்கு வந்துவிட்டேன்.
கேள்: அப்போதைய காலகட்டம் நீங்க hotel fieldக்கு வந்த சமயம், தற்போதை கால சூழல், இந்த இரண்டு period-லயும் hotel துறையில் சவாலா நீங்க பார்ப்பது?
சவால்ன்னு நான் சொல்லிக்கமாட்டேன். முதலில் சவால்னா, ஒரு நல்ல உணவு கொடுத்தால் போதும், limited item of food இருந்தா போதும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. இப்ப அப்படி இல்ல ஒரு varietyஆ சாப்பிடனும்ன்னு எதிர்பார்க்கிறார்கள், ஒரே மாதிரியான உணவு கொடுக்கும்போது அவங்களுக்கு bore அடித்துவிடுகிறது, அடுத்த generation வரும்போது complete-ஆ மாறிவிடுகிறது. அவங்க எதிர்பார்ப்புகள் எல்லாமே வித்தியாசமான உணவுகளை try பன்றதுக்கு readyயா இருக்காங்க, அன்றைக்கு அந்த வித்தியாசமான உணவுகள் எதையுமே try பன்றதுக்கு கூட readyயா இல்ல, இது ஒரு பகுதி மக்கள்.
இன்னொரு பகுதி மக்கள் பழமைக்கு திரும்பி போறாங்க traditional food வேணாம், அதாவது இயற்கையான உணவு வேண்டும் என்று சொல்லும் பொழுது இன்னொறு சாரார் மக்கள் வந்து junk food-னாலும் சரி whatever it may be வித்தியாசமான உணவு வேண்டும்ன்னு போறவங்க இரண்டு பேரு இருக்காங்க. ஆனா, நம்ம முதல்ல துறைக்கு வரும்போதே அன்றைக்கு என்ன ஒன்று இல்லாத ஒன்றை உள்ள கொண்டு வரதான் நினைச்சோம். அன்னைக்கு buffet என்ற concept இல்ல ஆனா அப்பகூட நம்ம வந்து chef and dish-ன்னு சொல்லி buffet-ல serve பண்ணக் கூடிய dish பூரா வாங்கி எங்க எல்லாம் அவங்களுக்கு இடம் வசதி இல்லையோ table chair போட்டு பன்ற வசதி இல்லையோ அங்க பூரா இந்த மாறி buffet உணவு கொடுத்து அன்றைக்கே இந்த process ஏற்படுத்த முடிஞ்சது மக்கள் அதையும் ஏற்றுக்கொண்டார்கள், இன்றைக்கு எல்லாத்தையும் mix பண்ணி வச்சிருக்கோம், பார்த்தீங்கன்னா ஒரு உதாரணத்துக்கு சொல்ல போனா vegetarian ஆனா non-vegetarian உணவு எப்படி இருக்கும்ன்னு taste பாக்க ஆச படுகிறவர்களுக்கு chicken மாறியும் mutton மாறியும் fish மாறியும் prawn மாறியும் vegetarianலயே அதே சுவையில இந்த உணவு கொடுக்க முடியுது அதையே விரும்பி சாப்பிடுறாங்க .
கேள்: இது குறிப்பா அந்த small scale hotel large scale hotel இந்த மாறி தரம் பிரிக்கிறாங்க இதுல இரண்டுத்திலுமே common-ஆ நாங்க பாத்தவரைக்கும் man power இதுல இருக்கிற சவால்கள் பெருசா சொல்றாங்க அது எப்படி handle பண்றீங்க ?
man power சவால்கள்ன்னு சொன்னோம்ன்னா அவங்கள நடத்தக் கூடிய விதத்தை பொறுத்துதான் இருக்குன்னு நான் சொல்லுவேன். நான் வந்து ரொம்ப பெரிய சவாலா எதிர்கொண்டதே இல்ல. ஏன்னா நாம முதல்ல ஆரம்பிச்சதும் எங்களிடம் கிட்டத்தட்ட ஆரம்பிச்சதுல இருந்து இன்றைக்கு வரைக்கும் இருக்கிறவங்க இருக்காங்க. நான் முதல்ல hotel 1982-ல ஆரம்பிக்கப்பட்ட hotel அதுல முதல்ல சேர்ந்த cook வயசாகி அவங்க retired ஆகுற நிலைமைல முதியோர் இல்லத்தில் நானே அவங்கள சேர்த்துவிட்டு கடைசி வாழ்நாள் வரைக்கும் என்னுடன் தான் இருந்துவிட்டு போனாங்க, திருப்பி கடைசி காலத்துல என்னுடைய உடலை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்கணும் வேற யாரிடமும் கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லி சொந்த பந்தங்களிடமுமே கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு relationship-அ maintain பண்ணீங்கன்னா இருக்கிறவர்கள் வெளியே போறதில்லை. இது வந்து மூத்தவர்களின் tradition, ஆனா இன்னைக்கு புதுசா வர்றவங்க மாறிக்கிட்டே இருக்காங்க அவங்ககிட்ட ஒரு loyalty என்ற expectation இல்ல. அதனால கொஞ்சம் அதிக salary கிடைச்சாலோ இல்ல கொஞ்சம் வசதி கிடைச்சாலோ போய்விடுகிறார்கள். நம்ம அவங்கள நல்லா treat பண்ணா எனக்கு தெரிஞ்சு ஒரு respect கொடுத்தா salaryய விட அவங்களோட மரியாதையும் நம்மள விட்டு போறது இல்லன்னு. இன்றைக்கு நிறைய opportunity இருக்கின்ற நிறைய வடமாநிலத்தவங்க வர்றாங்க, இதுலாம் ஒரு வாய்ப்பு. Challenge என்னான்னா அரசாங்கம் வந்து நிறைய இலவசங்களை கொடுத்து நம்முடைய இளைஞர்கள் ரொம்ப வேலை செய்றவங்க நல்ல உடல் சக்தியோட இருந்தவங்கள கெடுத்துட்டாங்க என்பது தான் என்னுடைய opinion. அது தான் நமக்கு இன்னைக்கு பிரச்சனை.
கேள்: இப்ப எல்லா தொழில்துறைகளைச் சார்ந்த ஒரு சங்கங்கள் இருக்கும், அதே மாறிதான் hotel சங்கம், இந்த சங்கத்துடைய செயல்பாடுகள், இதுல as a leader-அ நீங்க நிறைய விஷயத்தை face பண்ணுவீங்க , அந்த அனுபவத்தை share பண்ணுங்களேன்?
நான் பார்த்த சங்கங்களிலே மிகச் சிறந்த சங்கம் எதுன்னா உணவுக்குழுமம் என்று சொல்கின்ற Tamilnadu Hotels association தான். ஏன்னா நான் வந்து lions clubலையும் ஆளுநர் வரைக்கும் ஒவ்வொரு postலயும் இருந்து இருக்கிறேன். ஆனா நம்ம செய்வது 100 சதவீதம் ஒரு அங்கீகாரம் இருக்கிறதுன்னா அது இந்த Hotels association தான். இங்க இருக்கும்போது கூட கொஞ்சம் பேரு வந்து பாராட்டுவாங்க இன்னும் கொஞ்சம் பேரு வந்து அதையும் criticize பண்ணுவாங்க, அந்த ego-லாம் இருக்கும். இங்க வந்து சுத்தமா அந்த egoன்றது இல்ல. நான் பல associationல இருந்து இருக்கேன். ஆனா எல்லாத்தையும் compare பன்னும்போது உணவுத்துறை மட்டும் வந்து நம்ம சரியாக இருந்தால், நல்லதை பாரட்டுதலும், recognition கிடைக்கிறது. ஒரு Satisfaction இருக்கு நிறைய சங்கத்துல பாத்த நமக்கு ஒரு மனநிறைவு இருக்காது எதோ நம்ம போய்ட்டு வரோம், பேசிட்டு வரோம்ன்ற மாறி இருக்கும். அனா இந்த சங்கத்துல அப்படி இல்ல, நிறைய சாதிச்சு இருக்கிறோம் அந்த சாதிச்சதுக்கு தகுந்தமாறி அங்கீகாரம் கிடைச்சிட்டும் இருக்கு.
GST என்ற ஒரு problemலாம் இந்தியாவிலே எந்த ஒரு சங்கமும் சாதிக்காத விஷயத்தை நம்ம சங்கம் சாதிச்சு இருக்கு. 18 சதவிகிதம் விதித்திருந்த வரி விரிப்பை 5 சதவிகிதமாக மாற்றினோம், கிட்டத்தட்ட ஒரு 16 மாநிலங்களுடைய finance ministersரை personalஅ meet பண்ணி இதனுடைதுலாம் எடுத்து சொல்லி அந்த வரியை குறைக்க வைக்க முடிஞ்சது. அது தான் மனசுக்கு பெரிய நிறைவை கொடுத்த விஷயம். இப்போவும் அதேமாரி GST வேற வேற போராட்டங்கள நடத்திக் கொண்டிருக்கிறோம் outdoor tax போட்டு இருந்தங்க அதை குறைச்சி வாங்க முடிஞ்சது, இப்ப அதேமாரி largesக்கு அந்த hotel வந்து 7500 ரூபாய்க்கு மேல இருந்தால் அவங்களுக்கு உணவுக்கும் சேர்த்து 18% வாங்குறாங்க இது நியாயமே இல்லன்னு நாங்க போராடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் ஏன்னா 7500 ரூபாய்க்கு மேல roomக்கு வாடகை இருந்தால் roomக்குறிய வரியை உயர்த்தனும் , ஆனா உணவுக்கு எப்படி கூட்டுறீங்க ? அப்படின்றதுனால நாங்க போராடிட்டு இருக்கிறோம் அந்த போராட்டங்களும் எங்களுடைய போராட்டம் தொடரும் அதுல யார் பாதிக்கப் படறாங்கன்னா ஒரு philgiranation இருக்கு. திருவண்ணாமலையில கோவிலுக்கு வர்றவங்க அவங்க ஒரு familyயோடு ஒரு அறை எடுத்து தங்குறாங்கன்னா அந்த குடும்பத்தோட அறைக்கு 8000 ரூபாய் இருக்கலாம் 4 பேர் 5 பேர் தங்கலாம், அனா அதுக்கு 7500 ரூபாய் மேல நீங்க charge பன்றீங்கன்ற ஒரே காரணுத்தூக்காக அவங்களுக்கு உணவுக்கும் சேர்த்து 5% பதிலா 18% விதிக்கிறது நியாயமே இல்லன்றது எங்களுடைய கோரிக்கையா இருக்கு.
கேள்: இப்போ எல்லா துறையிலும் ரொம்ப பெரிய struggle வந்தது கொரொனா காலக்கட்டத்துல, அவற்றில் பெருசா ஆனது எனக்கு தெரிஞ்சு hotel துறை, அந்த நெருக்கடியான நிலையில எதிர்கொள்றதுன்னு அதுக்கு ஒரு power வேணும்ல, அத எப்படி? எதிர்கொண்டீங்க ? ஏன்னா நீங்க எல்லாருக்குமே guide பண்ற ஒரு positionல இருந்து இருக்கீங்க அப்படின்றபோது அது எப்படி?
உண்மையிலே அது really challenge ஆரம்பத்துல எப்படி இருந்ததுன்னு கேட்டீங்கன்னா மருத்துவர்களும் hospitalல அனுமதிக்கப்பட்டிருந்த patientsக்கும் உணவு கேட்கும் போது எல்லாருக்கும் பயம்தான், உணவைக் கொண்டு கொடுத்தா, கொடுக்கின்ற SERVERக்கு கொரொனா வராம இருக்கனும், அதுல Transmitted decision என்பது எல்லாருமே பாதிக்கப்படுவோமா. personlஆ கூட இங்க நமக்கு hotelல rooms கேட்டாங்க, மாவட்ட ஆட்சியர் கேட்ட உடனே நான் பயந்துபோய் roomல எல்லாம் renovation-ன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சோம் renovation பண்ணோம், ஆனா திருப்பி கூப்பிட்டு hotel சங்கத்தினுடைய தலைவர் நீங்க கொடுக்காட்டி யார் கொடுப்பாங்கன்னு நீங்க arrange பண்ணி கொடுங்கன்னு கேட்டதால அவசர அவசரமா ஒரு சேவைன்னு நினைச்சிட்டு immediateஆ ready பண்ணி மருத்துவர்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சோம். அதே மாரி உணவுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு என்ன அறிவிப்புன்னா ஒரு central kitchen பண்ணி நீங்க அங்கிருந்து உணவைக் கொடுங்க சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் வைத்திருந்தாங்க, அப்ப நான் கேட்டேன் எங்களுடைய central kitchen இப்போ close பண்ணிவச்சி இருக்கிறோம் வியாபாரம் இல்லாததால் நான் வேண்டுமென்றால் இலவசமாக தரேன், எப்படியும் current charge கட்டபோறோம் சமையல் அவங்களுக்கு சமையல் வல்லுனர்களுக்கு payment கொடுக்கபோறோம் salary கொடுக்கபோறோம், அதை நீங்க பயன்படுத்திக்கலாம் நான் பண்ணித்தர்றேன் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன், திடீர்ன்னு ஒரு நாள்கூப்பிட்டு 300 பேருக்கு உணவு வேண்டும் நீங்க பண்ணி கொடுக்க முடியுமான்னாங்க சரின்னு சொல்லிட்டு ingredients மட்டும் நான் கொடுத்துவிடுகிறேன்னு சொன்னாங்க கோவப்பட்டு சொன்னதும் கொடுத்தாங்க எங்களுடைய தரத்துக்கு match ஆகல அப்புறம் நான் சொன்ன அங்க என்ன விலை கொடுக்கிறீங்களோ அதையே கொடுத்தா போதும் நானே வாங்கி prepare பண்ணித்தர்றேன்னு அவங்கள வச்சி கொடுக்கும்போது 300 பேருக்கு ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 7000பேர் வரைக்கும் தினசரி பண்ணி கொடுக்கின்ற நிலமை ஏற்பட்டது பெரிய மன நிறைவை கொடுத்தது. அதுல பெருசா லாபம் இல்லவிட்டாலும் கூட ஒரு பெரிய சேவை செய்த மன நிறைவு இருந்தது அது ரொம்ப வெற்றிகரமா பண்ணோம். தமிழாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாம பண்ண உணவுகளுக்கெல்லாம் அரசாங்கத்திலிருந்து பணம் வராம போச்சு, அதை அப்ப பாதி வரைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசு இருந்தது அவங்களையும் தொடர்பு கொண்டு அவங்களுக்கு வாங்கி கொடுத்தேன் எல்லா HOTEL காரங்களுக்கும் வாங்கி கொடுத்தோம். அப்புறம் பாதில திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தது அப்போவும் தொடர்ந்து தொடர்பு கொண்டு அதிகாரிகளுடன் நம்மிடம் இருக்கின்ற பழக்கமெல்லாம் USE பண்ணி எல்லாத்துக்கும் போக வேண்டிய பணத்த வாங்கி கொடுத்தது தமிழ்நாடு HOTEL Association பண்ண ஒரு பெரிய சேவை என்று சொல்லலாம்.
கேள்: மாநில அளவில் hotel தொழில்கள். சுற்றுலாத் துறையோட பொருளதார வளர்ச்சிக்கு எந்த மாதிரியான பங்கை வகிக்கிறது? மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி ??
சுற்றுலா துறையே உணவகங்களையும் hotelsயும் நம்பி தான் இருக்கு அதுக்கு வேற வாய்ப்பே கிடையாது. சுற்றுலா வந்து மக்கள் மன நிறைவோடு இருக்கின்றதுக்கு ஒரு பெரிய காரணம். இதுல சுற்றுலா போகாமலேயே இருந்தோம்ன்னு சொன்னா எல்லாம் ஒரு நாளைக்கு psychological patient-ஆ ஆகிவிடுவோம் எங்க senior ஒருவர் சொல்வாரு your not money making machine நாம பணம் சம்பாதிக்கின்ற ஒரு இயந்திரம் இல்லை அப்படின்னு சொல்வாரு. பணம் தேவைதான் ஆனா அது வந்து அனுபவிக்கின்ற படி நாம் பயண்படுத்தனும் என்பதற்காக அவர் அந்த மாரி சொல்லி இருப்பாரு, அது தான் உண்மை நாம சம்பாதிக்கின்ற பணத்தை வச்சி வெளி உலகத்துக்கு போனாலும் வெளி உலகத்தை தெரிஞ்சிக்க முடியும் நம்ம மனசுக்கும் ஒரு அமைதி கிடைக்கும், அப்படி வர்றவங்களுக்கு வந்து நல்ல உணவு ஒண்ணு உடல் நலத்தை பாதிக்க கூடாது இரண்டாவது அவங்க எதிர்பாக்கின்ற சுவையோடு கொடுக்கனும், இப்ப நாம வந்து வட நாட்டுக்கு போனோம்னா சப்பாத்தி, ரொட்டி, அதனுடன் தால் அதுலாம் enjoy பண்றோம் தமிழ்நாட்டுக்கு வர்றவங்க கண்டிப்ப நம்முடைய இட்லியும் தோசையும் தான் சுவைப்பதற்க்கு ரொம்ப விரும்புவாங்க என்னா உலகம் பூரா famous ஆகிட்டு வருது அதுவும் நம்ம குறிப்பா நம்முடைய இட்லி எடுத்துக்கிட்டீங்கன்னா அது ஒரு சமச்சீர் உணவா சொல்ல முடியும் அது…. Full saturated food என்ற மாதிரி சொல்லலாம். என்னா அதுல எல்லாமே இருக்கிறது protein இருக்கிறது carbohydrate இருக்கிறது எல்லாமே இருக்கிறது. ஆவில வைக்கிறதுனால over fat-ஓ அகிறது இல்லல்ல அதுனால இது உலகம் முழுவதும் famous ஆனது நல்ல தரமான ஒரு உடல் நலத்தை பாதிக்காத hygienic food கொடுக்கிறதுனா அது தமிழ்நாட்ல தான்னு இன்னைக்கு சொல்லலாம் அத கொடுக்கும்பொழுது பெரிய மன நிறைவு இருக்கு எல்லா சுற்றுலாத் தளங்களும் இன்றைக்கு நல்லா பொய்ட்டு இருக்கு அதுக்கு காரணம் என்னான்னு கேட்டீங்கன்னா குறிப்பா தமிழகத்துல ரொம்ப நல்லா கொடுக்குறாங்க service. இப்ப வெளிநாட்டுக்கு நீங்க போனீங்கன்னா coffee வேணும்னா நீங்க போய் coffee machineல புடிச்சி நீங்க குடிச்சிட்டு வரணும் service bread toaster இருக்கும் நீங்க போய் toaster பண்ணி நீங்க butterஓ jamஓ தடவி சாப்பிடனும், ஆனா நம்ம ஊர்ல மட்டும் தான் சிரிச்சிட்டே போய் அவங்களுக்கு என்ன வேண்டும் எப்படின்னு பாத்து hot water வேணுமா chill water வேணுமா கேட்டு கொடுத்து அந்த உபசரிப்புன்றது நம்ம தமிழ்நாட்டில் தான் இருக்கு. அது எல்லாரும் enjoy பண்றாங்க ,இன்றைக்கு அடுத்த துறைன்னு பாத்தீங்கன்னா ஆன்மீக துறையும் தமிழக அளவுக்கு வேற எங்கேயுமே வள்ர்ந்ததுன்னு நான் சொல்லவே மாட்டேன். இந்தியா, தமிழகம் நமக்கு ஆன்மிக சுற்றுலான்றது Develop ஆகிட்டு இருக்கு சுற்றுலா தளம் வர்றங்களுக்கு நல்ல அடுத்தது medical tourism. உலகத்தில பர்த்தீங்கன்னா நம்மகிட்ட தான் medical tourism வந்து விலை குறைவாக இருக்கிறது. ஒரு Treatmentக்கு நீங்க Americaவ எடுத்துக்கிட்டீங்கன்னா இன்றைக்கு அதே தரத்திலான ஒரு சிகிச்சை முறை இங்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் இருக்கும்போது cost வந்து almost 50% தான் வருது, அதனால நிறைய மக்கள் வந்து பாக்கவேண்டிய இடத்தையும் பாத்துட்டு அவங்க மருத்துவ வசதியையும் பெற்று செல்கிறார்கள் இந்த இரண்டு வழியிலையும் tourism ரொம்ப நல்ல போய்ட்டு இருக்கு.
கேள்: hotel சங்கம், உரிமையாளர்களை எப்படி பார்க்கிறது? அதேமாரி hotel சங்கத்துடைய நோக்கம் அடுத்து, அதனுடைய செயல்பாடுகள் எப்படியாக இருக்கு? இருக்கனும்!
குடும்பம் மாதிரிதாங்க பாக்குறோம் ஒரு relationship தான் first எப்படித்தான் ஒரு relationshipப்பா இருந்தாலும் ஒவ்வொரு hotel காரருக்கும் இன்னொரு hotel உணவு உரிமையாளருக்கும் ஒரு நல்ல relationshipப்பை உண்டாக்கணும், எங்களுக்கு தெரிஞ்ச நல்லவற்றையெல்லாம் கற்றுக் கொடுக்கிறோம் நாங்க competitions எல்லாம் பார்க்கிறதே இல்லை ஒவ்வொரு நல்ல விஷயமும் வரும்போது, இது வந்து எல்லாத்துக்குமே நம்ம சொல்லி நீங்க இதை கடைபிடிக்க வேண்டும் அதுல என்னென்ன லாபம் இருக்குன்னு சொல்றோம் for example solar வருது, power charge கூடிட்டே போகுது நம்ம அதுல இருந்து தப்பிக்கிறதுக்கு அரசை குறை சொல்வதை விட நம்மிடம் solar இருப்பதனால் என்ன benefit இருக்கு. அதே மாதிரி gas use பண்ணி தான் பெரும்பாலான சமையல் பண்ண வேண்டியது இருக்கு அதுல best ceramic இருக்கு அதை use பண்ணா நம்மளால எவ்வளவு தூரம் நம்மளால gas conception குறைக்க முடியும் அப்படின்றது தான் நம்ம எடுத்து சொல்றோம் இன்னும் பாத்தீங்கன்னா convertor வந்து இருக்கு அதுல சமையல் பண்ணும் போதெல்லாம் என்னால இருக்கு அது ஏன் நம்ம use பண்ண கூடாது அது மாதிரி electrical indestric stove சொல்றேன் அதை பயன்படுத்தினால் நமக்கு என்ன லாபம் இருக்கு அப்படின்னு என்னென்ன equipment எல்லாம் இப்ப வந்திருக்கோம் அதெல்லாம் அறிமுகம் படுத்தி இது பண்றோம். இரண்டாவது அரசுக்கும் தொழில் செய்வதற்கும் இடையிலும் ஒரு bridge மாதிரி இருக்கணும் நிறைய பிரச்சனைகள் hotelsக்கு வரும்போது அந்த உரிமையாளருடைய பிரச்சனை கேட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வை நாங்கள் கண்டுபிடிக்கிறோம் உடனே பந்த் பண்றது, strike பண்றது இப்படி எல்லாம் பண்றது இல்ல அதிகாரிகள் கிட்ட நம்மளுடைய சிக்கலை எடுத்துச் சொல்லும் பொழுது ஒரு நல்ல தீர்வு கிடைக்குது. அந்த வகையில நாங்க ஒரு bridge செயல்பட்டு இருக்கும் main எங்களுடைய hotel உரிமையாளர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பது தான், அது இதுவரைக்கும் வெற்றிகரமா பண்ணிட்டு இருக்கோம்.
கேள்: தொழில்நுட்ப ரீதியா ஒரு update வேணும் எல்லா துறைக்கும், அப்படி, இந்த hotel துறை சார்ந்து equipments நிறைய வருது அதையும் தாண்டி மற்ற உருதுணைகள் பற்றி?
சுகாதாரத்துறை நம்ம எடுத்துக்கலாம், எந்த உணவுகள் எப்படி எல்லாம் கெட்டுப் போகும் அதை எப்படி கெட்டுப் போகாம காப்பாத்தணும்ன்றது நம்ம இந்தியாவுக்கு training கொடுத்துட்டு இருக்கிறோம். அந்த training வந்து தமிழ்நாட்டு கிட்ட இருந்து தான் ஆரம்பிச்சது. என்ன மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாங்க FSSI ACT. அந்த act வந்து நம்முடைய நாட்டுக்குப் பொருந்தாத மாதிரி சட்டதிட்டங்கள் அதுல நிறைய இருந்தது அதை முழுவதும் ஆராய்ந்து எதெல்லாம் நம்மக்கு பொருந்தும் எதெல்லாம் பொருந்தாது என்று தெளிவாக அரசுக்கு எடுத்துரைத்து, அவங்க class வச்சிருந்தாங்க training class அது அமெரிக்கால இருக்குற உங்களுடைய consultation வச்சு நமக்கு பொருந்தாத ஒரு வகையில ஒரு trainerக்கு train பண்ணனும்னா ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும் மூன்று மாசம் ஆகும். அதையே சுருக்கி ஒரே நாள்ல training கொடுக்கிறதுக்கும் அந்த training cost மொத்தத்திலே ஒரு 10,000 rupees க்கு வர மாதிரியான மாத்தி ஆனால் சுகாதாரம் வந்து 100% implement பண்ற அளவுக்கு training கொடுக்க ஆரம்பிச்சோம் இப்போ இதை கடைபிடிச்சாச்சின்னா, இந்த உணவில் இருந்து எந்த contamination வந்து உணவு உண்ட உங்களுக்கு பாதிக்காது அப்படி என்றால் assurance கொடுக்க முடியும். உணவு எந்த temperature நம்ம வந்து preserveல வைக்கணும் அது எத்தனை நாளைக்கு உங்களுக்கு help பண்ணும் எந்தெந்த உணவை எந்தெந்த குளிர்பான பேட்டையில் என்ன temperatureல வைக்கணும் அப்படின்றத கற்றுக் கொடுத்துவிட்டு வந்திருக்கும், என்ன மாதிரி பொருளை வாங்கணும் கெட்டுப்போன பொருள் எல்லாம் எப்படி, தரமான பொருள் எல்லாம் என்ன அதை எப்படி கண்டுபிடிக்கணும்ன்றது நம்ம கத்துக் கொடுத்து இருக்கோம். so இது ஒரு பிரதான முயற்சி இது ரொம்ப வெற்றி பெற்றிருக்கும் தொடர்ந்து.
கேள்: பொது சமூகத்தில், hotel என்றாலே non-hygenic இல்லன்னா ஒரு ஒரு மாதிரி healthy benefit இல்ல, என்ற ஒரு பார்வை இருக்கு அதே சமயத்துல parallel ஆ hotelல ரொம்ப enrich ஆனா food கொடுக்குறாங்க அப்படின்ற இந்த ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஆனா சமூக ஊடகங்கள்ல பெரும் வாரியாக hotel food வந்து junk food base பண்ணி ஒரு விஷயம் வைக்கிறாங்க, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது வந்து ஒரு வித்தியாசமான விஷயம். ஏன்னு கேட்டீங்கன்னா நாமளும் இங்க தான் உணவு உண்கிறோம் அதுவும், அதனால உடல் உபாதைகள் கெடுப்பதை நிச்சயமாக தயார் பண்ண மாட்டோம். அதுல ரொம்ப தெளிவா இருக்கிறோம். முதல்ல training கொடுத்துட்டே இருக்கணும். இன்னும் என்னென்ன அதிக வாய்ப்பு வீட்டில் கூட கவன குறைவா இருப்பாங்க தினமும் நம்ம prepare பண்றதுனால இன்னும் எப்படி improve பண்ணலாம் அப்படின்னு ஒவ்வொரு dishலையும் பார்க்கிறோம். இங்கே எங்கள் கிட்ட பார்த்தா நீங்க சொல்லுங்க pan to plate என்பார்கள். இட்லி எல்லாம் பாத்தா ஒரு காலகட்டத்திலே வீட்ல இருந்து எடுத்து hotel காட்டி பண்ணக்கூடிய சூழல் வரும் இப்போ எல்லாம் இங்கிருந்து எடுத்துட்டு போய் வீட்ல காட்டி இந்த மாதிரி வீட்ல குடு ஒண்ணு கேக்குற மாதிரி கேட்க வேண்டிய அளவுக்கு இருக்கு அவங்க அந்த ingredients select பண்றதே பார்த்தீங்கன்னா, உளுந்துன்னு எடுத்துக்கிட்டிங்கன்னா fresh உளுந்து போட்டீங்கன்னா உங்க இட்லி தோசை எல்லாம் நல்லா இருக்கும், rice இப்போ சாதத்துக்குரிய riceன்னு பாத்தீங்கன்னா old rice தான் நல்லா இருக்கும் எல்லாம் கால வெப்ப அளவை பொறுத்து மாறுது ___ குளிர்கால நிலை என்றால் சீக்கிரமாக fermentation ஆவாது summer timeலனா சீக்கிரமா fermentation ஆயிடும், இது எவ்வளவு நேரம் வைக்கணும் எவ்ளோ நேரம் வைக்ககூடாது இப்படி எல்லாத்தையும் நம்ம கற்றுக் கொடுத்து எல்லாத்தையும் இப்ப நம்ம train பண்ணிட்டு இருக்கோம். அதனால நிச்சயமா எங்களுடைய உணவு சரியாக இருக்கின்ற உணவு எடுத்துக்கிட்டிங்கன்னா நிச்சயமா உங்க வீட்ட விட hygenic எங்க கொடுக்க முடியும் அதுல சந்தேகமே கிடையாது. நீங்க junk food வேணும்னு சொல்லி பார்த்தா அது உங்களுக்கு உடல் ஒத்துக்காத உணவு சாப்பிட்டால் அது உங்களுடைய தவறு, hotel உரிமையாளருடைய தவறு அல்ல ஆனா விருப்பப்படுறவங்களுக்கு கொடுத்தாதான் தொழில் தொழிலா நடத்த முடியும் ஆனால் அந்த food எவ்வளவு நல்லா கொடுக்க முடியுமோ வரும்.
கேள்: ஏன்னா அந்த junk food base பண்ணி எல்லாத்தையும் புறம் தள்ளிடுறாங்க இல்ல அந்த பார்வையில் கொடுத்து விடலாம் அப்படின்னு சொல்லிட்டு இருக்கோம்..
இல்ல நீங்க சொல்றதும் correct தான். இப்பதான் சிறுதானியம் எங்களுக்கு கொடுத்து maximum நம்ம ready பண்ணிட்டு இருக்கோம் சிறு தானியங்கள்ள சுவையான உணவை எப்படி கொடுக்க முடியும் என்பதை almost நம்ம எல்லா உணவகங்களையும் daily எதாவது ஒரு சிறுதானிய உணவுகள், அது பொங்கலா போடறோம் எதோ ஒரு வகையில தோசையா போடுறோம் எங்க உணவுகள். எல்லாம் கேட்டீங்களா நீங்க என்ன தோசை கேட்டாலும் உடனே கிடைக்கும் ராகி தோசை கேட்டாலும் சரி சோள தோசை கேட்டாலும் சரி கோதுமை தோசை இருந்தாலும் சரி கம்பு தோசையா இருந்தாலும் சரி உடனடியாக கொடுக்க முடியும் அந்த அளவுக்கு ready பண்ணி வச்சிருக்கோம் நீங்க உங்களுக்கு time பார்க்க வேண்டாம் கேட்டீங்கன்னா உடனே போட்டு கொடுத்துடுவாங்க அதுக்கு time ஒரு 15 minutes extra எடுக்கும் அவ்வளவுதான் அந்த அளவுக்கு இப்ப வந்து சிறுதானியங்களையும் நம்ம அறிமுகப்படுத்திட்டு இருக்கோம் உலகத்திற்கு நல்லது எதுவோ அத்தனை கொடுப்பதற்கு முயற்சி பண்ணுகிறோம்.
கேள்: சங்கரீதியாக செயல்பாட்டினால் எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் உடைய எல்லா மாவட்டங்களுக்கும் பயணித்து இருப்பீங்க அப்போ unique ஆ ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த மக்களுடைய உணவு முறைகளோ இல்ல அது ஒரு மாதிரி different தெரிந்திருக்கும் அது மாதிரி நீங்க feel பண்ணது.
இல்ல இல்ல அது நான் இந்தியா பூராவும் போயிட்டு பயணிச்சிட்டு இருக்கிறேன் அதுவும் ஒவ்வொரு stateலையும் வித்தியாசங்கள் இருக்கு உண்மையான விஷயம் இப்போ வெஸ்ட் பெங்காலுக்கு போனீங்கன்னா பெரும்பாலும் fish ஜாஸ்தி சாப்பிடுவாங்க அங்கு கடுகு எண்ணெய் use பண்றாங்க அது நமக்கு ஒத்துவராது அங்க இருந்து உங்க வைத்தியத்துக்காக வேண்டி patients வராங்க அவங்களுக்கான்டி சரி உணவகங்கள்ல அந்த மாதிரி தயார் பண்ணி கொடுக்கிறோம் அது நம்ம மக்களுக்கு சுத்தமா அந்த flavour வந்து ஒத்துவராது, இப்ப திருநெல்வேலி பக்கத்துல போனா தெரியும் அங்க அல்வா என்னன்னு ஆனா இன்னைக்கு அது எல்லா இடத்திலும் use பண்றோம் இப்ப இங்க நீங்க எங்க hotelல வாங்குனீங்கன்னா அதுக்கு equal கொடுக்க முடியும் அது தமிழகத்தை பொறுத்தவரையில இப்ப எல்லா இடத்திலேயும் இருக்கின்ற உணவை எடுத்துக் கொண்டோம் எல்லா stateல இருக்க உணவை கிட்டத்தட்ட இப்போ கொடுக்கிறோம் நம்ம ஊர் மக்களுக்கு புடிச்ச மாதிரி இப்ப நீங்க எங்க போனீங்கன்னாலும் கிடைக்கும் சைட் டிஷ் கிடைக்கும் எல்லாத்துலையுமே இப்ப கொடுக்க ஆரம்பித்து இருக்கும் அதே மாதிரி எல்லாத்தையும் ரொம்ப நல்ல உணவுகள் இருக்குது உடல் நலத்துக்கும் நல்லது கொடுக்கிறேன் இன்னும் இருக்குது அதே மாதிரி உலகத்துல சமைக்கிற உணவு எல்லாம் கொடுக்கிற அளவுக்கு இந்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் train பண்ணி வச்சிருக்கு நம் உணவுகள் எல்லாம் அந்த அளவுக்கு வந்துடுச்சு.
கேள்: அப்புறம் அந்த functional food ஒரு concept சொல்றாங்கல்ல, உணவே மருந்து அப்படி என்று ஒரு விஷயம் அதுலயும் குறிப்பா regional food இந்த வேலூர் – ன்னா அந்த velloreக்கான ஒரு உணவு அதை வந்து நம்ம patent பண்ணி வச்சிருக்கணும் அந்த மாதிரியான ஒரு இந்த legal விஷயத்தை சங்கம் எப்படி அணுகுது?
பொதுவா அதுக்கான ஆலோசனைகளை நம்ம கொடுக்கிறோம் இங்க வந்து நம்ம முள்ளு கத்திரிக்கா அப்படின்னு சொல்லுவோம் அது வந்து வேலூர் மாவட்டத்தில் இருக்கு அது வந்து நம்ம patent பண்றதுக்கான முயற்சிகள் எடுத்து அப்புறம் அந்த மாவட்டம்___ இன்னோவா கொடுத்த அதோட வேலைகள் நடந்துட்டு இருக்கு ஊட்டி வர்கீ சொல்லுவாங்க அதுக்கும் நம்ம வந்து help பண்ணி அந்த தொழில்ல நம்ம patent வாங்கி இருக்கோம் இதையும் நாங்க வாங்கிட்டு இருக்கோம் அந்த உணவையும் நம்ம promote பண்றோம், realலா பாத்தீங்கன்னா அந்த உணவு ரொம்ப சுவையானதாக இருக்கும் எப்படி prepare பண்றது இந்த உதவியை யாருக்கு என்ன தேவைப்படுதோ அதை உடனே வாங்கிட்டு ஆலோசனைகள் கொடுத்துட்டு இருக்கோம்.
கேள்: அப்புறம் வந்து இந்த field ஓட artஏ costumer handling தான் அது எப்படி sir அதுக்கு ஏதாவது ஊழியர்களுக்கு special training மாறியோ இல்லை அதுக்கு எதாவது guidance எப்படி sir சங்கம் வச்சி இருக்கு?
இதுல ரெண்டு விஷயங்கள் இருக்குங்க உணவுத்துறை தான் மிக மிக சிரமமான ஒரு துறை, ஏன்னு கேட்டீங்கன்னா என்னுடைய நண்பர் அடிக்கடி சொல்லுவாரு அதாவது நீங்க hotel காரங்க வீட்டில் மாடு வாங்க கூடாது hotel காரர்கள் வீட்டில் பொண்ணு கொடுக்க கூடாதுன்னு சொல்லணும் ஏன்டா இப்படி சொல்றீங்கன்னு சொல்லி கேட்டா எங்க வீட்ல இருக்குற மாடு வந்து நல்ல கவுணி தண்ணியோ vegetable wasteயும் wasteடான foodயும் சாப்பிட்டு ரொம்ப கொழு கொழுன்னு இருக்கும் நீ வாங்கிட்டு போய் உங்க வீட்ல வச்சு சீக்கிரமா வெடிச்சு போயிடும் அது தாங்காது, பொண்ணு வந்து ஏன் கொடுக்க மாட்டேன்னா ஒரு hotel கரானா sincere அவன இருந்தா என்ன காலையில ஆறு மணிக்கு கடை திறக்க வேண்டிய இருந்தா அவங்க 5 மணிக்கு எழுந்து போயிடனும் அப்போதான் அடுப்பை பத்த வச்சு எல்லாம் heat ஆகி 6 மணிக்கு அவங்களால உணவு கொடுக்க முடியும் night அந்த மாதிரி 10 மணிக்கு உணவு கொடுத்த close பண்றேன்னு சொன்னா 12 மணி வரைக்கும் இருந்து எல்லாத்தையும் சுத்தம் பண்ணி மறுநாள் காலையில கடையை திறக்க முடியும், இதுதான் சொல்லுவாங்க ஐயா உனக்கு பொண்ணு கொடுத்தா காலைல என்னோட பொண்ணு எந்திருக்கிறது குள்ள நீ எந்திரிச்சி கடைக்கு போய்டுவ nightல என் பொண்ணு தூங்கிட்ட பிறகுதான் நீ வீட்டுக்கு வருவ எப்படி கொடுக்கலாம் என்று சொல்லி ஒரு பெரிய சிக்கல் இருக்கு. இப்போது மாறி இருக்கு முன்னாடி எல்லாம் cashier இருந்து எல்லா உரிமைகளும் அமர்ந்து கொண்டு இருந்தாங்க இப்ப எல்லா technology machine எல்லாம் வந்ததுக்கு பிறகு billing machine எல்லாம் வந்தது பிறகு எல்லாம் குறைஞ்சிருக்,கு வரக்கூடிய customer எல்லாம் பாத்தீங்கன்னா வீட்ல பல்வேறு பிரச்சனைகளை face பண்ணிட்டு தான் கடைக்கு வருவான் வந்து சாப்பாடு வச்சவுடனேதான் அந்த கோபத்தை இங்கே காட்டுகிறார்கள் வீட்ல காட்ட முடியாது கோவங்கள் எல்லாம் இங்கே காட்டுகிறார்கள் வீட்டில் உப்பு இல்லை என்றாலும் சாப்பிடுவாங்க கொஞ்சம் உப்பு குறைந்தால் கூட தப்பா சொல்லிடும் சில customer எல்லாம் இருக்காங்க அவங்களுக்கு recognise பண்ணி receive பண்லனா he will try to find out the fault தேடி கண்டுபிடிச்சு ஏதாவது ஒரு குறையை indirect சொல்லுவாங்க இவங்கள எல்லாத்தையும் சமாதானம் பண்றது பெரிய விஷயம் அதனால அவங்களுக்கு நம்ம தனியா training கொடுக்கிறோம் உங்களுடைய எப்படிப்பட்ட மனநிலையில் வருவாங்க அத நாம எப்படி handle பண்றது என நம்ம ஒரு service industryல இருக்கிறோம் அப்படின்னு முதல்ல மனசுல வச்சுக்கோங்க அப்படி என்றது training கொடுத்துட்டு இருக்கோம் அதனால success போயிட்டு இருக்கு. இருந்தாலும் சமூக விரோதிகளால் பெரிய பெரிய பிரச்சனைகள் போயிட்டு இருக்கு. அண்மையில் முந்தாநாள் பார்த்தீங்கன்னா ஒரு விஷயம் சென்னையில அம்பத்தூரில் ஒரு உணவகத்துல fullஆ drinks சாப்பிட்டுவிட்டு வராங்க வந்தவுடனே எனக்கு ஒரு omlet கொடு என்று சொல்லி கேக்குறாங்க அது சைவ உணவகம் omlet இல்ல சொன்னதும் என்னடா நான் கேட்டா omlet தர மாட்டேன் என்று சொல்லி பின்னால் இருந்து வெட்டு அருவாளை எடுத்து வெட்டி கையில அவனுக்கு வெட்டுப்பட்டு அந்த இடத்துல அவன் சாஞ்சு விடுறான் cashier because ஏன்னா night ல சாப்பிட வரும்போது உங்க எல்லாம் relax பண்ணிட்டு எல்லாரும் சாப்பிட வேண்டியது எல்லாம் சாப்பிட்டீங்க வராங்க அப்ப அவங்க வரும்போது மனநிலை entirely different இருக்கும் அதையுமே face பண்ற நிலைமைக்கு hotel காரங்க மட்டும் தான் தள்ளப்படுகிறார்கள்.
கேள்: இப்ப அரசு தரப்பில் இருந்து hotel சங்கத்துக்காக நீங்க ஏதாவது முன் வைக்கணும்னு நினைச்சீங்கன்னா நீங்க வைக்கலாம் sir
அரசாங்கத்துக்கு இப்போ ஒண்ணே ஒண்ணு தான் நாங்க கேட்டுட்டு இருக்கோம் இரவு 10 மணிக்கு மேல கடைகள் வைக்க கூடாது என்று நிறைய இடத்தில இருந்து காவல்துறை வந்து insurance பண்றாங்க அரசாங்கமே ஒரு ஆணையை ஏற்று இருக்கு 24 மணி நேரமும் தொழிலில் நடக்கலாம் தமிழகத்தில இந்தியாவிலேயே கூட நடக்கலாம் அப்படின்னு ஒரு அரசாணையை வெளியிட்டு இருக்காங்க இதுக்கும் மேல நம்முடைய high cort உயர் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு caseல ஒரு உத்தரவு பிறப்படுத்தி இருக்காங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா ஒரு வீட்ல எலி தொல்லை இருக்கின்றதுக்காக வீட்டைக் கொளுத்திட கூடாது எலிய தான் ஒழிக்கணும், அதே மாதிரி சமூக விரோதிகள் பண்ணக்கூடிய ரகளைக்காக வேண்டி உணவகங்களை close பண்ணனும் சொல்றது நியாயம் இல்ல அவங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுத்து கடைகளை நடத்த நடத்துவதற்கு நீங்க help பண்ணனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க இப்ப அண்மையில் ஒரு தீர்ப்பு மதுரை கிளை கொடுத்துருக்காங்க அவங்க என்ன கொடுக்கறாங்கன்னா போலீஸ் protection கொடுத்து கதைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்க நீங்க அனுமதிக்கலாம் ஆனாலும் கூட சட்ட ஒழுங்கு காரணத்தைக் காட்டி இன்றைக்கும் கடைகளை காவல்துறை close பண்ண சொல்லி இருக்காங்க அதை தொடர்ந்து நாம அரசுக்கு வலியுறுத்தி வரும் இப்பவும் தொடர்ந்து மனு கொடுக்க போறோம்னு, ஒன்னு இருக்கு அவங்க வந்து சிறு சிறு உணவுகளில் கூட licence எடுக்கணும் சொல்றாங்க அந்த licence என்னன்னா உங்களுடைய investment என்னவோ அதுல 1% licence இருக்கும் இதெல்லாம் எந்த வகையிலுமே நியாயமே கிடையாது நமக்கு investmentக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை மத்த எல்லாத்துக்குமே licence வாங்குறோம் ஒரு fees இருக்கு நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு பேருக்கு சாப்பாடு போடுற எவ்ளோ fees இதுல ஒரு அர்த்தம் இருக்கு investment தகுந்த மாதிரி சொல்றது சரி இல்ல அதுலயும் நம்ம தொடர்ந்து fight பண்ணிட்டு இருக்கோம் அரசோட, சீக்கிரமா ரெண்டுத்துக்கும் ஒரு நிவாரணம் கிடைக்கும்னு நினைக்கிறேன். நிறைய சொல்லணும்னா நிறைய இருக்கு முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம்.
கேள்: இப்போ தமிழினத்திற்கு தமிழர்களுக்கு என்று…..
குறிப்பாக சொல்லணும் குப்பை இருக்கு, hotel இருக்கிற குப்பையை எடுக்க சொல்லுவாங்க அரசாங்கம் இந்த குப்பை எடுக்க மாட்டாங்களாம் நாமே எடுத்து இந்த குப்பையை மறு சுழற்சி செய்யணும்னு சொல்றாங்க ஆனால் குப்பைக்கு வரி போட்டு property tax இல்லாம இந்த குப்பை வரியை நீங்க கட்டுன்றாங்க. ஒண்ணு நீங்க குப்பை எடுத்தா அதுக்கு வரி கேளு என்னையே குப்பை எடுக்க சொல்லிட்டு என்கிட்ட வரி கேட்டா என்னது இது, நாம வெள்ளக்கார ஆச்சியை எதிர்த்து நம்ம போராடற அந்த வசனம் தான் ஞாபகம் வருது நீ ஏன் வரி கேட்கிறாயே எங்க வீட்டுக்கு வந்து நாட்டு நட்டாயா எங்களுடைய பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயா கேக்குற மாதிரி இருக்கு அந்த கேள்வி.
கேள்: இப்ப waste என்றதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது sir என்னன்னா எல்லா மாவட்டத்தில் இருக்கிற hotel அதுல வர waste எல்லாம் நம்ம recycle பண்ணனும்னா bio format என்ற ஒரு விஷயத்தை முன் வைக்கிறாங்க so இப்போ அதுக்கான facilities வந்து இவங்க ஏற்படுத்துறாங்களா sir hotel waste எல்லாம் எடுத்து அதை bio gas பண்ணி நம்மளுக்கு கொடுக்குற மாதிரி அந்த மாதிரி ஏத support பண்றாங்களா sir?
இல்ல sir அது ஒரு பெரிய weakness அரசாங்கத்துகிட்ட இருந்து என்ன பிரச்சனைன்னு கேட்டா அவங்களாலயும் ஒரு இடத்தை வந்து identify பண்ணி கொடுக்க முடியல சுற்றி இருக்கிற மக்கள் வந்து அதை செய்யக்கூடாது அதுக்கான reason முறையாக செயல்படாததால் அதிலிருந்து badsmell வருது insects அதிலிருந்து நிறைய வர ஆரம்பிக்குது அதை proper ah எடுத்து பண்ணா அது waste to wealth என்று சொல்லுவோம் அது ஒரு பெரிய wealth. அது செய்றதுக்கு வந்து அரசாங்கம் பெரிய தவறவிட்டாங்க என்ன சொன்னா நீங்க பண்ணுங்கன்னு சொல்றாங்க அரசாங்கத்தால் ஒரு இடத்தை identify பண்ண முடியல பிரச்சனை இருக்குன்னா சாதாரண hotel என்ன பண்ண முடியும், அதுல பெரிய முரண்பாடு இருக்கு அரசாங்கம் வந்து fssi act food safty மற்றும் __ என்ன சொல்லுதுன்னா குப்பைகளை 12 மணி நேரத்துக்கு மேல உணவகத்தில் வைக்கக் கூடாதுன்னு சொல்லுது ஆனா இன்னொரு பக்கம் pollution control மற்றும் அரசாங்கமும் என்ன சொல்றாங்கன்னா உள்ளேயே நீங்க process பண்ணுங்கன்னு சொல்றாங்க ரெண்டும் அப்படியே நேர் மாறாக எதிர்மறையான ஒரு சிந்தனை கொண்டது. அது வந்து உணவு வந்து சின்ன சின்ன உணவுகள் வந்து run பண்ணிட்டு இருக்காங்க அங்க வந்து இந்த process வாய்ப்பே கிடையாது. இப்ப வந்து அரசாங்கம் வந்து underground drainage வெச்சுட்டாங்க அதுலயும் என்ன சொல்றாங்க இப்போ drainage water சுத்தம் பண்ணி விடுங்கன்னு சொல்றாங்க சுத்தம் பண்ண தண்ணிய திருப்பியும் அதே drainageல விட்டா என்ன ஆகும், நாம அப்பவே சொல்லிருவோம் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் அதே மாதிரி அங்க போயிட்டு இருக்குற விஷயத்துல இந்த பால விட்டா என்ன பிரயோஜனம் அதை அரசு கிட்ட தொடர்ந்து சொல்லிட்டு இருக்கோம் அது நிச்சயமா அரசாங்கம் தான் இந்த வேலையை செய்ய முடியுமே தவிர ஒரு தனிப்பட்ட நபரால் இந்த வேலையை செய்ய முடியாது அரசாங்கம் செய்தால் ரொம்ப waste to wealth கண்டிப்பாக அதில் ஒரு பெரிய profit பண்ண முடியும் gas எடுக்கலாம் அவர் கொடுக்கலாம் என்னென்னமோ செய்யலாம் நல்ல organic உரங்கள் செய்யலாம்.
கேள்: தமிழ் இனத்திற்கான மக்கள் வந்து இந்த உணவில் காமிக்க கூடிய ஒரு emotional touch இருக்குல்ல sir அத நீங்க எப்படி define பண்ண விரும்புறீங்க sir? இந்த நிலத்தின் மனிதர்களுடைய உணவு…
அது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது அரசர் வந்து ஒரு விருந்து கொடுக்கிறார் வீட்டில் ஒரு நல்ல ஒரு அமைச்சர் விருந்துக்கு வருகிறார் விருந்து சாப்பிட்டு போகும்போது அங்க இருந்து தங்க டம்பளர் எடுத்துட்டு போயிருவாரு பிறகு அரசர் எங்க திருட்டுப் போச்சு என்று சொல்லி எல்லாம் தேடி புடிச்சு வரும்போது ஒருத்தனை பிடித்து அடிக்க போறாங்க அப்போ இந்த மந்திரி வந்து ஐயா நான் தான் ஐயா அதை எடுத்துட்டு போயிட்டான் அப்படின்னு சொல்றாங்க உடனே அரசர் என்ன நினைக்கிறாங்கன்னா இவர் பொய் சொல்றாரு அந்த ஒரு சிறுவனை காப்பாற்றுவதற்காக வேண்டி நானே எடுத்துட்டேன் இவர் பொய் சொல்றாரு அப்படி என்ற போது அது அமைச்சர் சொல்றாரு உண்மையாகவே எனக்கு போச்சுன்னு தெரியல நான் தாங்க எடுத்தேன் அப்புறம் திருப்பி அதை யோசிச்சு பார்க்கும்போது என்ன ஆச்சுன்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி இங்கேயே மாதிரி விருந்து சாப்பிட்டு இருக்கிறார் அவர் அந்த அரிசியை எங்கே வாங்கினார்கள் என்றால் ஒரு திருட்டு கிட்ட இருந்து chease பண்ணிட்டு வந்த அரிசியும் அந்த உணவு பொருளை வாங்கி அன்னைக்கு சமையல் பண்ணி இருக்காங்க so என்ன பண்ணி இருக்காங்க திருட்டு தொழிலோட அத சமைத்து சாப்பிடும்போது அதுல இருக்கிற அந்த touch எல்லாம் வந்து அவன் mind குள்ள போய் இருக்கலாம்லயா அது psychological லா மனநிலையே மாறிட்டு இருக்கு அப்படின்றாங்க அதனால நம்மளுடைய உணவுகள் வந்து மனநிலையையும் உடல் நலத்தையும் பாதிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. நீங்க ஒருத்தர் ரொம்ப காரமான உணவு சாப்பிடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு கோபம் வரும்னு சொல்லுவாங்க, நிறைய உப்பு சாப்பிட்டீங்கன்னாலும் உங்களுக்கு உடல் வியாதியும் மன வியாதியும் வரணும்னு சொல்றாங்க அதனால அந்த உணவு வந்து நம்ம உடல் நலத்தோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றது.
கேள்: இப்போ இந்த interview மூலமாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நீங்க சொல்றது sir?
நாம செய்றத விட மிகச்சிறந்த ஒரு தொழில் இந்த உலகத்திலே கிடையாது ஏன்னா அந்த திருப்தியும் மனநிறைவும் நமக்கு மட்டும்தான் வரும் நல்ல உணவு கொடுத்த உங்களுக்கு இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது என்ற அளவுல வச்சு திருப்தியா சாப்பிட்டு அதுக்கப்புறம் pay பண்ணி கொடுத்துட்டு போறாங்க இந்த தொழில்ல நம்ம எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் குறைந்த விலையில் கொடுக்க முடியுமா அந்த அளவுக்கு நம்ம முயற்சியும் தொடரும் அதுதான் நம்மளுடைய success அது கண்டிப்பா நம்ம கடைபிடிப்போம்.
கேள்:சரிங்க sir புதுசா இந்த தொழிலுக்கு வரவங்களுக்கு நீங்க சொல்ற விஷயம் வாங்கன்ரிங்களா இல்ல…..
இதுக்கு சின்ன ஒரு கதை சொல்லணும்னா எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார் இவர் ஒரு hotel ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாரு இடத்தை வச்சிட்டு இருக்காரு உங்களுடைய ஆலோசனைகளை கொஞ்சம் சொல்லுங்க, இப்ப என்னப்பா தம்பி பண்ணிட்டு இருக்க? அப்படின்னு கேட்டதுக்கு அவர் சொன்னார் நான் ஒரு mobile sales பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னார் size என்னப்பா? என்று கேட்டதற்கு பத்துக்கு பத்து இருக்கும் எங்க கடை அப்படின்னார், சரி எத்தனை மணிக்கு கடை திறப்ப? அவர் சொன்னார் 10 மணிக்கு திறக்கிறேன், எத்தனை மணிக்கு close பண்ற? 9:00 மணிக்கு close பண்றேன், எத்தனை மணிக்கு நீ வருவ பா அப்படின்னு கேட்டா 9:50க்கு வருவேன் sir, கடையை முடிச்சிட்டு night வந்து 10:10, 10:15 க்கு போயிடுவேன் sir அப்படின்னாரு நீங்க hotel பண்ணனும்னா எத்தனை மணிக்கு வரணும்னு? கேட்டேன் அவரு தடுமாறினாரு, நீங்க காலையில அஞ்சரை மணிக்கு வரணும் night 12 மணிக்கு வீட்டுக்கு போனோம் அப்படின்னு சொன்னேன் இப்போ நீ என்ன அதுல சம்பாதிக்கிறேன் என்று கேட்டேன் அவர் ஒரு amount சொன்னாரு இந்த வருமானத்தில் பாதி கூட உனக்கு கிடைக்காது ஹோட்டல் ரன் பண்ணா நீ sacrifice பன்னி பண்ண தயாரா இருந்தா மட்டும்தான் உன்னால அதுக்கு இன்னும் நாலு கடையை போட்டு cellphone கடையே நடத்திட்டு போய்விடலாம் sir எனக்கு இந்த hotel தொழில் வேணாம்னு சொல்லிட்டு போயிடுவேன். அதுதான், அதனுடைய நிலைமை வெற்றிகரமா பண்ணனும்னா யார் பண்ணனும்னா கடின உழைப்பு பண்ண யாரு readya இருக்காங்களோ அவங்க நிச்சயமா இந்த தொழில் பண்ணனும் அதுல hard work இருந்தா கண்டிப்பா இதுல முன்னேற்ற வாய்ப்புகள் இருக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது.
கேள்: அடுத்த தலைமுறைக்கு ஒரு senior நீங்க சொல்லணும்னு நினைக்கிறது sir! அடுத்த தலைமுறைக்கு இது வந்து out of hotel இதுதான் sir?
அடுத்த தலைமுறைக்கு சொல்லணும்னா நீங்க என்ன தொழில் பண்ணாலும் ஜெயிக்க முடியும் இந்த தொழில் பண்ணா தான் ஜெயிக்கணும்ன்றது எல்லாம் இல்ல அதுல main உங்களுக்கு attitude தான் வேணும் அந்த attitude இருந்தால் நீங்க மத்த skill எல்லாம் develop பண்ணிக்கலாம் அதுவும் skilled person hire பண்ணிக்கலாம். உங்களுடைய எண்ணம் வந்து சரியா இருக்கணும். நான் வந்து தொழிலுக்கு வரும்போது நம்ம கொடுக்கறது உணவுதான் நம்பர் 1 இருக்கணும்னு நினைச்சு தான் கொடுக்கணும் அப்ப இந்த hotel ஆரம்பிக்கும் போது கூட அடுத்த பத்து வருஷத்துக்கு வேலூர்லயே நம்பர் ஒன் hotel எதுன்னா இந்த ____ தான் இருந்தது இப்போ அடுத்த __ பண்ணி இருக்கோம், எண்ணுடைய நம்பிக்கை சரியாக இருந்தால் அடுத்த 10 வருஷத்துக்கு NUMBER 1ஆ இருக்கனும், அப்படிதான் நாம Plan பண்ணிட்டு இருக்கோம், நீங்க நல்லா பண்றதுக்கும் மோசமா பண்றதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் கிடையாது உங்க மன நிலைதான், திருப்பியும் நான் சொல்றேன். அதுனால உங்க attitude இருந்து அதுல உங்க முயற்சியும் எண்ணங்களும் நல்லா இருந்தா கண்டிப்பா வெற்றி அடைய முடியும்.
கேள்:: உங்களுக்கு பிடிச்ச ஒரு food sir?
எனக்கு பிடிச்ச first foodன்னா இட்லி சாம்பார்தான், அதுக்கப்றம் எல்லாதையும் விரும்பி சாப்பிடுவேண், குறிப்பா உணவுன்னு சொல்ல போனால் அது இட்லி சாம்பார்தான்.
கேள்: உங்களுடைய பொழுதுபோக்கா நீங்க பண்றது sir?
வாழ்க்கையில பொழுது போகலன்னு எதையுமே மிஸ் பண்றது இல்லங்க cricket நல்ல cricket இருந்தால் cricket பார்ப்பேன், நல்ல புத்தகம் இருந்தால் புத்தகங்களை வாசிப்பேன். நல்ல திரைப்படங்கள் இருந்தால் அதைப் பார்ப்பேன், நண்பர்களோட வாரத்தில் ஒரு நாளாவது ஒதுக்கிடுவேன் அவங்களோட பேசிட்டு இருப்பேன், கோயிலுக்கு போக நல்ல வாய்ப்பு இருந்தா நல்லா சாமி கும்பிட்டு வருவேன், உலகத்துல பாதி நாடுகளை சுத்திட்டு வந்துட்டேன் இன்னும் 50% country தான் இருக்கு எங்க இருக்கிற நாடுகளையும் சுற்றி அங்க இருக்குற விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும் ஆர்வமா இருக்கேன், இந்தியாவில் இருக்கிற எல்லா cityக்கும் போயிட்டு வந்துட்டேன் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு அதையும் போயிட்டு வந்துடுவேன், எங்க எல்லாம் oppurtunity இருக்கோ அதையும் enjoy பண்ணிவிடுறேன்.