நம் வாழ்வின் பெரும்பாலான நினைவுகள் சமையலறையில் உருவாகின்றன. அம்மாவின் கைசாப்பாடு, பாட்டியின் ரசம் வாசனை, திருவிழாவிற்கு தயாராகும் பலகாரங்கள் இவை அனைத்தும் ஒரு கதையைச் சொல்கின்றன – நம் உணவின் கதையை. அதேபோல் நாட்டுப்புறங்களில் வளர்ந்த உணவுப் பழக்கங்கள், இயற்கையை மதிக்கும் ஒரு வாழ்வியலை பிரதிபலிக்கின்றன. இந்த புழுதியின் உணவுச் சிறப்பிதழ், அந்தக் கதைகளின் ஒரு கட்டம். தமிழர் பாரம்பரிய உணவு முறைகள், பல நூற்றாண்டுகளாகத் தெய்வீகமான பரிமாணங்களோடு வளர்ந்துள்ளன. நாம் இன்று சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் நம் மூதாதையரின் செல்வம் இருக்கிறது. இவ்விதழ், அந்தச் செல்வத்தை மீண்டும் நமக்குத் நினைவுப்படுத்தலாம். இவற்றில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும், நம் முன்னோரின் ஞானத்தையும், இன்றைய ஆரோக்கியப் பார்வையையும் இணைக்கிறது. கட்டுரைகளை வழங்கிய கட்டுரையாளர்கள், நேர்காணல்களை வழங்கிய சான்றோர்கள் தொழில்முனைவோர்கள், சித்த மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் புழுதியின் நண்பர்கள் அனைவருக்கும், வாசகர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்…
உணவை வாசிக்கவும், ரசிக்கவும், பகிரவும் அழைக்கிறோம்.
zzmYF IheUznN QdQQkKIS tXw FxfLSCQG qaDmzed