சினிமாவை பொழுதுபோக்கு அம்சத்தின் ஒரு பகுதியாக இருந்த இடத்திலிருந்து தீர்க்கமான தெளிவான அரசியல் பேசக்கூடிய இடத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேசமுடியாத காட்சிப்படுத்த முடியாத விசயங்களை,திரைப்படங்களுக்கு இருக்கு இந்த வறட்சித்தன்மையை வலைத்தொடர்கள் தீர்த்துவைத்திருக்கின்றன என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.திரைமொழியின் அடுத்த கட்டங்களை நோக்கி தொடர்கள் நகர்த்தியுள்ளன.உலகம் முழுக்க வலைத்தொடர்கள் அதிகம் பார்க்கக் கூடிய விரும்பக்கூடிய ஒரு வடிவமாக மாறிக்கொண்டுவருவதை பார்க்க முடிகிறது.இதில் சாதக பாதகங்கள் உண்டு.அதற்கான ஒரு உரையாடலின் ஆரம்பமே இந்த இணையத்தொடர் சிறப்பிதழ்.எப்போதும் போல் கட்டுரைகளை வாசித்து கருத்துகளை பகிர்வீர்கள் என்று நம்புகிறோம்.தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி.

புழுதி ஆசிரியர் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *